Monday, 22 August 2011

முள் வேலிக்குள் மலர்கள்

விட்டு விடுதலையாகி ஒரு சிட்டுக்குருவி போல (இலங்கைத் தமிழர்கள்)

அனுமன் வைத்த
நெருப்பின் மிச்சம்
இன்னும் எரிந்து கொண்டிருகிறது

தேயிலையும் தேங்காயும்
கொழித்த தேசம் இன்று
முள்வேலிக்குள்
முடங்கி கிடக்கிறது
ஊரில் உள்ளவர்களைப் பற்றி
விசாரித்தால் அந்த மேகம் கூட
கலைந்து போகின்றது.
 Source: Daily Thanthi paper

அன்னா ஹாசரே- விதி ஒன்று செய்வோம்

வெற்றிடத்தை காற்று நிரப்பும் என்பது அறிவியல் விதி அது  போல மக்களவை, மாநிலங்களவை, சட்ட பேரவை உறுப்பினர்கள் ஊழல்,இலஞ்சத்திற்கு எதிராக செய்ய வேண்டிய வேலைகளை செய்யாமல் வெற்றிடமாக இருந்ததால்,அதை நிரப்பும் ஆக்சிசன் 02 காற்றைப்போல  வந்தார் அன்னா ஹாசரே.

Source: Dinamalar

இந்திய தலைவர்கள்

சர்தார் வல்லபாய் பட்டேல்
சர்தார் வல்லபாய் பட்டேல் வழக்கறிஞராக இருந்த போது ஒரு கொலை வழக்கில் வாதாடிக் கொண்டிருந்தார். அப்போது அவருக்கு ஒர் தந்தி வந்த்து.அவர் தந்தியை படித்துவிட்டு பையில் வைத்துவிட்டு  மீண்டும் வாதத்தை தொடர்ந்தார்.. அன்றைய வாதத்திற்க்கு பிறகு நீதிமன்றம் கலைந்தது.பிறகு தந்தியில் என்ன செய்தி என்று பட்டேலின் நண்பர் கேட்டார். அதற்க்கு பட்டேல் என் மனைவி இறந்து விட்டாள் என்று எவ்வித படபடப்புமின்றி கூறிவிட்டு நகர்ந்தார்.

ராஜாஜி
ஒருமுறை ராஜாஜி தன் ஊழியரிடம் ஒர் அஞ்சல் உறையைக் கொடுத்து அதில் தபால் தலையை ஒட்டிக்கொண்டு வருமாறு கூறினார். அந்த ஊழியர் அவசரத்தில் தபால் தலையை தலைகீழாக ஒட்டிக்கொண்டு வந்து ரஜாஜியிடம் கொடுத்தார்.
இதை கவனித்த ராஜாஜி அட என்னப்பா இது நாங்கள் அனைவரும் பிரிட்டிஷ் சக்கரவர்த்தியை கவிழ்க்க படாதபாடு படுகிறோம்,அனால் நீ அந்தக் காரியத்தைஒரு நிமிடத்தில் செய்துவிட்டாயே என்று சிரித்து கொண்டே கூறினார்.

வினோபாபாஜி-வினோதமானவர்ஜி
சிறுவன் ஒருவன் நூல் நிலையத்தில் சட்டையிலாமல் படித்துக் கொண்டிருந்தான். அதை பார்த்த நூல் உதவியாளர் தம்பி இப்படி சட்டையில்லாமல் வந்து படிக்க கூடாது என்றார்.உடனே அந்த சிறுவன் அப்படி எதாவது நூலக விதி இருக்கிறதா என்றான். உடனே அவர் மேலதிகாரியிடம் செய்தியை கூறினார்.சிறுவனை அழைத்த மேலதிகாரி  சட்டையில்லாமல் இருப்பது நாகரிகமல்லவே என்றார்.அந்தச் சிறுவன் மிகத் துணிச்சலாக சிறுவர்களாக இருந்தாலும் உட்காரச் சொல்லிவிட்டு பேசுவதுதான் இந்த நாட்டின் நாகரீகம் என்றான்.பிறகு சிறுவனை உட்கார வைத்து பேசினார் அதிகாரி. வெப்ப நாடாகிய பாரதத்திற்கு ஏற்ற உடைப்பழக்கம் பற்றி  தெளிவாக கூறிவிட்டு வெளியே வந்தான் சிறுவன் அந்த சிறுவன்தான்  ஆச்சார்யா வினோபாபவே


டாக்டர் ராதாகிருஷ்ணன் -
  பாராட்டு விழா ஒன்றில் ஆங்கிலேயர் ஒருவர் கூறினார் இறைவன் ஆங்கிலேயர்களான எங்கள் மீது அதிக அன்பு வைத்துள்ளார் மிகவும் முயற்சி செய்து அதிக விருப்பத்தோடு  எங்களை படைத்தார்.எனவேதான் நாங்கள் இவ்வளவு  வெள்ளையாக இருக்கிறோம் என்றார்.அங்கு ராதாகிருஷ்ணனும் இருந்தார் அந்த ஆங்கிலேயர்களின் ஆணவ பேச்சைக் கேட்டு புன்முறுவலுடன் கூடியிருந்தவர்களிடம் கூறினார்.நண்பர்களே ஒருமுறை இறைவன் ரொட்டி தயாரிக்க விருப்பம் கொண்டார்  உடனே ரொட்டி தயாரிக்கவும் உட்கார்ந்தும் விட்டார்.அவர் தயாரித்த  முதல் ரொட்டி சிறிது வேகவில்லை.அதன் காரணமாகத்தான் ஆங்க்கிலேயர்கள் பிறந்தனர் இரண்டாவது ரொட்டி அதிக நேரம் வெந்தது அதன் மூலம் நீக்கிரோக்கள் பிறந்தனர்.இவ்வாறு பயிற்சி செய்த அனுபவம் மூலம் மூன்றாவது ரொட்டியை சரியான பக்குவத்தில் தயாரித்தார். அது அரை வேக்காடாகவும் இல்லை கருத்தும் போகவில்லை அதன் காரணமாக இந்தியர்களாகிய நாங்கள் பிறந்தோம் என்றார்.இந்த பதிலை கேட்ட ஆங்கிலேயர்க்ள் வெட்கி தலை குனிந்தனர்.

ஆதாரம்-தினத்தந்தி

Friday, 19 August 2011

ராதகிருஷ்ணன் - வின்சென்ட் சர்ச்சில்


உயர்திரு முன்னாள் முதல் துணை குடியரசு தலைவரும், ஆசிரியருமான
டாக்டர். ராதாகிருஷ்ணன்,மற்றும் இங்கிலாந்து பிரதமர் திரு.வின்சென்ட் சர்ச்சில் இருவரும் ஒரு உணவு விருந்தில் பேசிக்கொண்டது சர்ச்சில் – இந்தியர்களுக்கு சுகாதார பழக்கம் ஏதும் தெரியவில்லை,அவர்கள்
கையால் உணவு சாப்பிடுகிறார்கள்,மேசைக்கரண்டியை பயன்படுத்த தெரியவில்லை என்று ராதாகிருஷ்ணனை பார்த்து சொல்கிறார்.
ராதாகிருஷ்ணன் நீங்கள் பயன்படுத்தும் மேசைக்கரண்டி வேறு அனைவரும் பயன்படுத்திய எச்சில், ஆனால் என்னுடைய கையை என்னை தவிர வேரு யாரும் பயன்படுத்தவில்லை என்று நூதானமாக பதில் தந்து சர்ச்சிலை வியக்க வைத்தார்.

சுதந்திரம்


சுதந்திரம் தரப்பட்டது அல்ல உங்கள் தியாகத்தல் பெறப்பட்டது.
அனுஅனுவாய் துன்பங்கள் நேர்ந்த பொழுதிலும் ,துப்பாக்கி குண்டுகளை மழையாய் பொழிந்தபோதிலும், இன்பமென மகிழ்ந்து, இன்னுயிர் தந்து,
இந்த மண்ணுயிர் காக்க மானமே பெரிதென போராடி, உதிரங்கள் பல வழிந்தோடி, உயிர்கள் பல மடிந்தோடி,இறுதியில் உங்கள் உறுதியில் பெறப்பட்டது.
நீங்கள் விபத்தில் இறந்திருந்தால் விதியென்று விட்டிருப்போம்,
நோயினால் இறந்திருதால் அழுது முடித்திருப்போம், உங்கள் தியாகம் விதியும் அல்ல, விபத்தும் அல்ல. 

படித்ததில் பிடித்த சிந்தனை துளிகள்.

சுதந்திர இந்தியா


பாலுக்காக அழும் குழந்தை,கல்விக்காக ஏங்கும் சிறுவன், வேலைக்காக அலையும் சிறுவன் , வறுமையில் வாடும் தாய், இவர்கள்  இல்லாத இந்தியாவே உண்மையான சுதந்திர இந்தியா.


                                              -பகத்சிங்-