ஒழிக்க வேண்டியது ஊழலை,ஊழலை ஒழிக்க பாடுபடுபவர்களை அல்ல
இந்தியாவில் மக்கள் தொகை மட்டுமல்ல,ஊழலும்,ஊழல் பணமும்,செய்யும் நபரும் அதிகம்தான்.யாராவது அதை தட்டிக் கேட்கவும்,ஒட்டுமொத்த மக்களின் உணர்ச்சியுமாய்,முன்வந்து கேட்கச் சென்றால் அவரின் சொந்த நடைமுறையை விமர்ச்சிப்பதும்,அவரின் மீது அரசின் கடுமையான போக்குகளை கடைபிடிப்பதும் மக்களை எரிச்சலூட்டுகிறது.ஊழலை ஒழிக்க முன் வந்தவர்கள் தன் சொந்த,தனிப்பட்ட காரணதிற்காக அல்ல என்பதை அரசு புரிந்து கொள்ள வேண்டும்.
![]() |
| அன்னா ஹாசரே இளமை |
பூனைக்கு மணிகட்ட வந்த நபரின் மீதே மணியை கட்ட நினைப்பதும்,அதை விரட்ட நினைபதும் முட்டாள்தனம் வந்தது பூனை அல்ல புயல் போன்று ஆவேசமாய் புறப்பட்ட ஒட்டுமொத்த இந்திய மக்களாகும்.ஒழிக்க வேண்டியது ஊழலைத்தான்,ஊழல் எதிர்பாளார்களை அல்ல


No comments:
Post a Comment